காலேஜ்-ல படிச்ச இந்த
மூனு வருசத்துல, முதன் முதலா
பிரகாஷ், வித்யாவை வெளியே கூட்டிகிட்டு போறான். கூட்டிகிட்டு போறான்னு சொல்றதவிட, வித்யாதான் ஏதோ பெரிய
மனசு பண்ணி இவன் கூட வர, ஓ.கே சொன்னாள்-னு சொல்லனும்.
அதுவும் ஏ.சி. பஸ்-ல! சாதாரணமா, பிரகாஷ் ஏ.சி. பஸ்-ல எல்லாம் போக மாட்டான். கூட்டமா இருக்கற டவுன் பஸ்-ல கடைசியா ஏறி, இறங்க
வேண்டிய ஸ்டாப் வந்ததுமே கண்டக்டர் மூஞ்சிய கூட பார்க்காம இறங்கிப் போற நல்ல பையன்!
வித்யா கூட ஊர் சுத்தணும்ங்கறதுக்காக, ஒரு வாரம் கஷ்டப்பட்டு விரதமிருந்து தம்-மு, சரக்கு இப்படி எதுவுமே தொடாம
சேர்த்து வச்ச காசுலதான், அவளை ஏ.சி. பஸ்-ல, மாயாஜால்-க்கு
கூட்டமே இல்லாத ஹிந்தியோ
இல்ல இங்கிலீஷ் படத்துக்கோ, கூட்டிப் போறான்!
அப்பப்போ, கலாய்க்கிறதும், சிரிக்கிறதுமா அவகூட
ஜாலியா கடலை போட்டுகிட்டு இருந்தான். அப்ப, அடுத்த
ஸ்டாப்-ல பஸ் நின்னது. அதுல, பிரகாஷ் மாதிரியே ஒரு காலேஜ் பையன் ஏறினான். “ப்ளேபாய்”-னு சொல்ற
அளவுக்கு எல்லா லட்சணங்களும் அவன்
முகத்துலயும், நடவடிக்கையிலும் தெரிஞ்சது...
பிரகாஷை விட பர்சனாலிட்டியா இருந்ததாலயோ,
இல்ல வேற காரணத்தினாலயோ, நம்ம பிரகாஷ் அவனையே பார்த்துகிட்டு இருந்தான். அப்ப, வித்யா
இயர்போன்-ல பாட்டு கேட்டுகிட்டிருந்தா...
அப்போ பிரகாஷ் எதிர்பார்த்த மாதிரியே, அவன்
இவங்க உட்கார்ந்திருந்த சீட்டுக்கு எதிர்ல வந்து நின்னு, வித்யாவை பார்க்கத் தொடங்கினான். வித்யா இத முதல்ல
கவனிக்கல, ஆனா, பிரகாஷ் அவனைப் பார்த்து முறைக்க அவன் மொபைலில் ஏதோ நோண்டுவது போல நடித்தான்.
யாரு நேரமோ தெரியல, அந்த நேரம்
பார்த்து இவங்களுக்கு பின்னாடி சீட்டுல உட்கார்ந்திருந்தவங்க எழுந்திருச்சு போக, அந்த
ப்ளேபாய் நேரா அதுல போய்
உட்கார்ந்துகிட்டான்.!
இதை கவனிச்ச வித்யா, கண்களிலேயே என்னன்னு கேட்க, பிரகாஷும் பதிலுக்கு ஒன்னும் இல்லியேங்கற மாதிரி தோளை குலுக்கினான். ஆனா வித்யா-க்கு
பிரகாஷ் ஏன் இப்படி திடீர்-னு அப்நார்மலா பிஹேவ் பண்ணறான்னு புரிஞ்சு... விஷமமான சிரிப்போட “ஓ.கே. ஓ.கே”- ன்னு தலைய ஆட்டி, மறுபடியும் பாட்டு கேட்க ஆரம்பிச்சிடுறா...
சில நிமிடங்கள் அமைதியாக கழிந்தது... திடீரென,
“பிரகாஷ்?”
“ம்ம்...”
“என்ன
யாரோ பின்னாடியிருந்து தொடுற
மாதிரி இருக்குடா..”
‘மவனே! நான்
கூட இருக்கறப்பவேவா... நம்மாளு முன்னாடி வெயிட்டு காமிக்கறதுக்கு செம்ம
சான்ஸ்-டா, மிஸ் பண்ணாத-ன்னு’ மனசுக்குள்ள நினைச்சுகிட்டு...
“அவனேதான்.. இப்ப
என்ன பண்றேன்னு பாரு”
சொல்லிகிட்டே, வித்யா ஏதோ சொல்ல
வந்தத கூட கவனிக்காம,
பிரகாஷ் வேகமா திரும்பறான்!
பிரகாஷ் வேகமா திரும்பறான்!
அங்கே...
பின் சீட்டில் ஒரு இளம்
ஜோடி உட்கார்ந்திருக்க, அதில் அந்த
பெண்ணின் மடி மீது ஏறி நின்று
கொண்டிருந்த அவர்களின் குட்டி பாப்பா, வித்யா தலையில இருந்த, பூ டிசைன் போட்ட
ஹேர்பின்னோட விளையாடிகிட்டு இருந்தது!
பிரகாஷ் அவங்கள பார்த்து மழுப்பலா சிரிச்சிட்டு, அவன் எங்க போனான்-னு தேடினான்.
அவன் இவங்களுக்கு மூனு சீட்டு
தள்ளி நின்னுகிட்டு, எதிர்-ல யார்
கூடவோ போன்-ல பேசிகிட்டு இருந்த, ஒரு பொண்ணையே பார்த்து ஸ்டைலா தலைமுடி-ய கோதி விட்டு அவளைப் பார்த்து பல்லைக் காட்டிக் கொண்டிருந்தான்.!
(இந்த கதையை, நான் “குங்குமம்” ஒரு பக்க
கதை பகுதிக்காக அனுப்பியிருந்தேன். அத பப்ளிஷ் பண்ணினாங்களான்னு தெரியல. அதனால என்ன? என்னோட ப்ளாக்-ல நானே பப்ளிஷ் பண்ணிட்டேன்!)
No comments:
Post a Comment